ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த …

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற் செறிவோ, படைப்பு மொழி குறித்த ஓர்மையோ, சொல் முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான …