தாக்கம், பாதிப்பு, பின்பற்றுதல், பிரதியெடுத்தல்

  பிரதியெடுத்தல் குறித்து ஒரு வேடிக்கையான கூற்று உண்டு. இலக்கியத்தில் பிரதியெடுத்தல் அனுமதிக்கப்படும்.  ஒரே ஒரு நிபந்தனையின் கீழ். அதாவது பிரதியெடுப்பு மூலத்தைவிட மேலானதாக இருக்க வேண்டும். அப்படி மூலத்திலும் மேம்பட்டதாக வெளிப்பட்டுவிட்டால் பிரதியெடுப்பு ‘கொப்பி’ எனக் கொள்ளப்படாது. அது இன்னொரு மூலப் படைப்பே. அவ்வளவுதான். இந்த வேடிக்கைக் கூற்றில் ஒரு கலை உண்மை இருக்கிறது. இலக்கியமும் சரி கலைகளும் சரி எப்போதும் ஒன்றின் தொடர்ச்சிகளாகவே இன்னொன்று இருக்க முடியும். அது …

தர்பாரி ராகம் – கலைமுகம் கட்டுரை

இந்திய செவ்வியல் நாவல்களில் வெளிப்படும் விரிவான சமூகச் சித்திரங்கள் இப்போதும் ஆர்வமூட்டக் கூடியவை. நீலகண்டப் பறவையைத் தேடி, கறுப்பு மண், விஷக்கன்னி, அரை நாழிகை நேரம், ஒரு குடும்பம் சிதைகிறது, அழிந்த பிறகு, ஆரோக்கிய நிகேதனம் போன்றவை. இன்னும் பட்டியல் விரிவானது. அவை மொழிபெயர்பாக தமிழிலும் கிடைக்கின்றன. இந்த நாவல்களில் பலமாக இருக்கும் இரண்டு முக்கிய இயல்புகள், இதுவரை வந்த ஈழ நாவல்களில் பெரும் குறைபாடுகளாக இருக்கின்றன. ஒன்று, இவை …

சுனில் கிருஷ்ணனின் ‘குருதி வழி’ சரித்திரம் மேல் படியும் செதில் பொருக்கு.

சமகாலப் புனைவெழுத்தாளர்கள் குறித்து கிரிசாந் இப்படிச் சொல்வதுண்டு, ‘இவர்கள் எழுதும் புனைவுகளை விட, புனைவுகளைப் பற்றிச் சொல்லும் கதைகள், விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவர்கள் புனைவுக்கு வெளியே புனைவுகளைப் பற்றிச் சொல்வதில் ஒரு பத்து சதவீதத்தையாயினும் இவர்களால் புனைவுகளுள் எழுத முடிந்தாலே இவர்களால் சராசரிக்கும் மேலான நல்ல புனைவுகளை எழுதிவிட முடியும்’ சமகால நாவல்களை வாசிக்கும் தோறும் கிரிசாந்தின் இந்தக் ‘கருத்து’ என்னுள் இறுகி வலுவடைந்து வருகிறது. ஒரு …

வெள்ளிவீதி

இது வெள்ளிவீதியின் இரண்டாவது நிகழ்வு. முதல் நிகழ்வு பரிஸில் 12 யூலை நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் எழுந்த நிறைவின் விசையே அடுத்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறது. வழமையான விமர்சனக் கூட்டங்களின் போதாமைகள் உணர்ந்தவை தான். ஆனால் அவற்றை மீற முடியாமல் ஒரு சடங்குபோல நிகழ்த்திக் கொண்டிருந்தோம். கூடவே நமக்கு ஒரு நிகழ்வின் அடிப்படை புரிவதில்லை.  பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, விமர்சனக் கூட்டங்களுக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ளமுடியாமல் …

வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை 1

உரையாடல் பகுதி 1 நாவல்களில் மொழி, காட்சிச் சித்தரிப்பு குறித்து தொடர்ந்து கேள்விகள் வந்தபடியே இருக்கின்றன. தமிழில் நல்ல நாவல்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் பெரும் விழுக்காடு நாவல்கள் செறிவான மொழியில், துல்லியமான காட்சிவிவரணைகள், சித்தரிப்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றில் பொதுச் சித்திரங்கள் வராது. அப்படிப் பொதுச் சித்திரங்கள் வந்தால் அது நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதில்லை. அவற்றில் எழுத்தாளருக்கே தனியாகத் துலங்கும் புறச்சூழல் இருக்கும். அவரது …