தாக்கம், பாதிப்பு, பின்பற்றுதல், பிரதியெடுத்தல்
பிரதியெடுத்தல் குறித்து ஒரு வேடிக்கையான கூற்று உண்டு. இலக்கியத்தில் பிரதியெடுத்தல் அனுமதிக்கப்படும். ஒரே ஒரு நிபந்தனையின் கீழ். அதாவது பிரதியெடுப்பு மூலத்தைவிட மேலானதாக இருக்க வேண்டும். அப்படி மூலத்திலும் மேம்பட்டதாக வெளிப்பட்டுவிட்டால் பிரதியெடுப்பு ‘கொப்பி’ எனக் கொள்ளப்படாது. அது இன்னொரு மூலப் படைப்பே. அவ்வளவுதான். இந்த வேடிக்கைக் கூற்றில் ஒரு கலை உண்மை இருக்கிறது. இலக்கியமும் சரி கலைகளும் சரி எப்போதும் ஒன்றின் தொடர்ச்சிகளாகவே இன்னொன்று இருக்க முடியும். அது …
