நினைவுகளின் சிறகில் பறக்கும் ஒரு நாவல் ‘சிறகை’ – ப.பார்தீ

தசரதனுக்கு ஆயிரம் பெண்டாட்டி இரமன் செந்த மனைவியில் சந்தேகப்பட்டு தீக்குளிக்கவைத்து காட்டுக்கனுப்பி கொடுமைசெய்தவன் கடவுள் அட கடவுளுக்கு கடல் கடக்கதெரியாமல் குரங்கு உதவி இவற்றையெல்லாம் நம்பி கும்பிடும் உங்களுக்கு சம்பவங்கள் உண்மைகளாகவும் நியாயங்கள் தப்பிதலாகவும் வைத்திருக்கும் இலக்கிய உலகில் ஒரு இலக்கியப் படைப்பின் மதிப்பு அது சொல்லும் கதையில் மட்டும் இல்லை. அது வாசகரிடம் எழுப்பும் கேள்விகளிலும், சமூகத்தை தன்னைத் தானே மறுபரிசீலனை செய்யத் தூண்டும் ஆற்றலிலும் இருக்கிறது. அந்த …

ஷோபாசக்தி : அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுதல்.

Prix Émile Guimet de littérature asiatique என்பது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் முக்கியமான பிரெஞ்சு இலக்கிய விருதுகளில் ஒன்று. ஆசிய–பிரெஞ்சு கலாச்சார ஊடாட்டத்தை விரிவுபடுத்துவதும், சமகால ஆசிய இலக்கியங்களை பிரெஞ்சு வாசக உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் அதன் நோக்கம்.  அதன் 2026 ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவு விருது ஷோபாசக்தியின் Salamalecs — தமிழில் : சலாம் அலைக்  — நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்குக் …

ஆதிரை : தெரிந்த நெருக்கமான சம்பவங்கள் இருப்பது மட்டும் ஒரு புனைவிற்குப் போதுமானதல்ல.

ஆதிரை : குழிமுயலெய்த அம்பு கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.  // 36 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போராட்டத்தில், ஒரு பகுதி மட்டுமே ஆதிரையில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் சொல்லப்படும் பல சம்பவங்கள் எனக்கு நெருக்கமானவை. அந்தக்காலத்தில் நான் அந்தப் பகுதியில் தான் வாழ்ந்தேன். ஈழப்போரின் முழுக் கதையையும் சொல்வதற்கு ஆதிரை ஒன்றும் வரலாற்று நூல் அல்ல. நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு. எதைவைத்துப் போதாமை என்று …

வெள்ளிவீதி – இலக்கியக் கூடுகை

சிறிய இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஓர் அவநம்பிக்கை இருக்கிறது. அது இக் காலகட்டத்தில் பலருக்கும் எழும் சந்தேகம். சமூக வலைதளங்கள் என்ற பெரிய வெளி இருக்கும் போது இலக்கியக் கூட்டங்களை ஏன் மிகச் சிறியதாக சொற்ப நபர்களுடன் நிகழ்த்தவேண்டும்? அதனால் என்ன பயன்? ஒத்த ரசனை, ஒத்த அறிவுத்திறனான நண்பர்கள் மட்டுமே கூடி கலையுமிடமாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும்? அப்படியான சிறு கூட்டங்களால் அறிவுத்தளத்தில், பண்பாட்டு வெளியில் …

கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி – தர்முபிரசாத்

கே.டானியல் ஈழ இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டு வெளியை எழுதியவர்களுள் மிக முக்கியமானவர். அவரளவுக்கு நுட்பமான பண்பாட்டுக் கூறுகளுடனான சமூகச் சித்திரத்தைத் தங்கள் புனைவுகளில் மிக விரிவாகவே எழுதியெடுத்திருப்பவர்கள் ஈழத்தில் மிக அரிது. அதிலும் யாழ்ப்பாணத்தில் சொற்பம்.  கே.டானியல் அளவிற்கு யாழ் சமூகத்தை விரிவாக எழுதியிருக்கும் இன்னொருவர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ).  இவர்கள் இருவரது படைப்புகளிலும் யாழின் பண்பாட்டு அகம் ஒன்று உயிர்ப்புடன் விழித்திருக்கிறது. இருவரும் எழுதியிருப்பது நாம் …

சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன்

எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது ஓர் சமகால பிரதியாய் எனக்குள் விரிகிறது. “சமகாலம்” என்ற பதத்தினூடே நெளிகின்ற பாம்பாய் இருக்கும் காலம் எனக்கு புறத்தே இருப்பது அல்ல;அது என் அகத்தினுள்ளே படம் எடுக்கும் …