சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன்

எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது ஓர் சமகால பிரதியாய் எனக்குள் விரிகிறது. “சமகாலம்” என்ற பதத்தினூடே நெளிகின்ற பாம்பாய் இருக்கும் காலம் எனக்கு புறத்தே இருப்பது அல்ல;அது என் அகத்தினுள்ளே படம் எடுக்கும் …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” எனும் பெயரை வைத்து உருட்டி இலக்கியம் எனும் கலையைக் கொச்சைப் படுத்துவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம் என நானும் நினைக்கின்றேன். கலைக்கு எந்த ஒரு அடைமொழியும் தேவை …