சிறகை (குறுநாவல்) – வாசிப்பனுபவம் : லலிதகோபன்
எழுத்தாளர் தர்மு பிரசாத் அவர்களின் “சிறகை” குறுநாவலின் முதலாவது வாசிப்பு நிறைவுற்றது.உறைந்து கிடக்கும் காலத்தின் மீது மெழுகுத்துணி ஒன்றை இட்டு பிம்பங்களை உருவாக்குவது போல், இந்த நாவலின் களமும்” இன்னமும் முற்றுப்பெறாத” ஈழப்போரின் ஓர் படிமம்தான். ஆனாலும் ஓர் வாசகனாய் இது ஓர் சமகால பிரதியாய் எனக்குள் விரிகிறது. “சமகாலம்” என்ற பதத்தினூடே நெளிகின்ற பாம்பாய் இருக்கும் காலம் எனக்கு புறத்தே இருப்பது அல்ல;அது என் அகத்தினுள்ளே படம் எடுக்கும் …
