என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி
ஜீவ முரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி நாவல் குறித்த கட்டுரை. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களால் எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து விலகி மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பேசிய நாவல்களென எதையும் தனித்து அடையாளம் காட்டமுடிவதில்லை. பெரும்பாலான புலம்பெயர் படைப்பாளிகள் இயக்கப் பின்புலம் உள்ளவர்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் அடியில் கரும்பரப்பாக …
