இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன், பகுதி 1

பகுதி 1 (இந்த தொகுதியின் அனைத்து கதைகள் தொடர்பிலும் எழுத இருப்பதால் பகுதி பகுதிகளாக வெளிவரும் ) பொதுவாக தொகுதி என்ற சொல்லாடல் கவிதை அல்லது சிறுகதைகளையே குறிக்கும். இது குறித்த ஒரு எழுத்தாளரின் படைப்புக்களாயோ, அல்லது பல எழுத்தாளர்களின் புனைவுகள் சார்ந்ததாயோ இருக்கும். ஐம்பத்தோராவது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியிடப்படும் இந்த தொகுதி இலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் இருபத்தியேழு சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கிறது. சிறுகதை இலக்கியத்தினை பொறுத்து,காலத்துக்கு …

இமிழ் : அரசியல் புலம்பெயரிகளால் பிற சமூகங்களுடன் ஏன் பண்பாட்டு ஊடாட்டம் செய்ய முடிவதில்லை?

சென்னையில் கருப்புப் பிரதிகள் ஏற்பாடு செய்த ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கூட்டத்தில் (05.05.2024) ஆய்வாளர் கண்ணன்.எம் அவர்களுடைய விமர்சனங்களைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் என்ன ‘விமர்சன’ முறையோடு இருந்தேனோ அதே நோக்கோடு அட்சரம் பிசகாமல் ஒரு தொகுப்பை விமர்சித்திருக்கிறார். காலப்பயணம் செய்து என்னையே – நான் பார்த்ததுபோல இருந்தது. என்னுடைய நல்லூழ் ஒரு சில  வருடங்களுக்குள்ளேயே என் தேடலின் பாற்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கும், படைப்புகளில் …

நவீனம் கடந்த கவிதைகள் – ஒரு மறுப்பு

றியாஸ் குரானா வின் நவீனம்  கடந்த கவிதைகள் என்ற முன்வைப்பே மிகப் பரிதாபகரமானது.  நவீனம் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது கைத்தொழிற்புரட்சியின் பின்னரான காலகட்டம். அதன் பெரும் கொடையாக சனநாயகம், சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றைச் சொல்வார்கள். பொதுக்கல்வி, பத்திரிகைகள் வழியாக அது பரவலாக்கப்பட்டது.  தமிழ் மனம் தன் பெரும் செய்யுள் மரபிலிருந்து நவீனகாலகட்டத்தினுள் நுழைந்த போது அல்லது நவீன காலகட்ட சிந்தனைகளை சந்தித்த போது, அது செய்யுளின் இறுக்கம் உதறி நவகவிதை …

ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

01. எழுத்தாளர் யதார்த்தன் மீது பாலியல்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி 51வது இலக்கியச் சந்திப்பின் தொகுப்பான இமிழில் யதார்த்தனின் சிறுகதை பிரசுரமானதைக் கேள்விக்குட்படுத்தியவர்களுக்கு, இலக்கியச் சந்திப்பு அரங்கிலும், முகநூலிலும் ஷோபாசக்தி சில பதில்களைக் கொடுத்திருக்கிறார். (பார்க்க: பின்னிணைப்பு 1)  இதில் கவனிக்க வேண்டியது, உரையாட வேண்டியது, விவாதிக்க வேண்டியது   ‘பாலியல் குற்றவாளி’ யதார்த்தன் – என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான். இதழ் தொகுப்பில் இருந்த நடைமுறைப் பிரச்சினைக்கான பதிலை ஷோபாசக்தி …

திலீபன் : கரும்புலியும், அகிம்சைவாதியும்.

திலீபனின் நினைவு நாட்களில் காந்தியின் ‘ஒறிஜினல்’ அகிம்சை சந்தேகிக்கப்படும் சடங்கு நடக்கும். அதொரு வருட வழமை என்பதால் அதில் விசனப்பட ஏதும் இருப்பதில்லை. அப்படி ஏதும் நிகழாவிட்டால் மனம் பதட்டமடைமகிறது.சமூகம் முதிர்ந்துவிட்டதா? இல்லை கனிந்து விட்டதா? என்ற சாத்தியமற்ற சந்தேகங்கள் வலுக்கின்றன. அந்த உரையாடல்களின் ‘வெளியே’ இருந்தாலும் அவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும். அவற்றின்  உள்ளடக்கம் அவை செல்லும் திசைக்குமான அச்சுகள் புலி விசுவாசிகளாலும், புலி எதிர்ப்பாளர்களாலும் பல நூற்றாண்டுகளின் …

ஆனைக்கோடாலி (சிறுகதைகள்) : உட்சுருங்கும் புவியியல்

தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய எழுத்துக்கானதாகப் தர்மு பிரசாத் வரித்துக்கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான புள்ளியாய்ப் படுகிறது. அதே சமயம், எதார்த்தவாத …