தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், போலியுமான முன்வைப்புகள் நிறைந்தவை. ஆகவே உடனடிக் கவனிப்புக்கு உள்ளாகின்றன. அவரது எழுத்துக்குப் பல பாவனைகள் இருக்கின்றன. போலியான முகமூடிகள் போல, நுரை தள்ளும் ஆவேசப் பேச்சுக்கள் போல. …

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” எனும் பெயரை வைத்து உருட்டி இலக்கியம் எனும் கலையைக் கொச்சைப் படுத்துவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம் என நானும் நினைக்கின்றேன். கலைக்கு எந்த ஒரு அடைமொழியும் தேவை …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு …