சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை (குறுநாவல்) தர்மு பிரசாத் கருப்பு பிரதிகள் வெளியீடு : தை 2026 என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை …

செம்மையாக்கம்

ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு  புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவே இலக்கியத்தை அளவிட மதிப்பிட இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு அளவுகோல். அதுவே மூளைச் சோம்பலர்களின் இலகுவான வழிமுறையும் கூட. ஒரு புனைவில் …

துதிக்கை ஒற்றல்

கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் …

கொடிறோஸ் (குறுநாவல்)

  கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்தனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து கிரிசாந்தின் இக் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளும் குறைவான வாசிப்பே ஈழத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அநேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்பு பல முன்முடிவுகளுடன் சுமையுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்புக் குழுக்களோ அல்லது இலக்கிய …

வாழ்க்கைக்குத் திரும்புதல் – அறிமுக நிகழ்வு

  காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன …

மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க …