ஆக்காட்டி 18

ஆக்காட்டி 18 அச்சில் இருக்கிறது. தமிழகத்தில் இடப்பட்டிருக்கும் இரண்டுவார கால நாடங்கினால் இதழ் அனுப்பிவைப்பது தாமதமாகியிருக்கிறது. இதழில் வெளியாகிய படைப்புகள்.

ரூஹ் : வரலாறும் நாவலின் நிகழ்காலம் அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளும் புரட்சி பிம்பங்களும்

தமிழின் நவீனத்துவத்தை மீறி வந்த நாவல்களில் கட்டற்ற போக்கும் மொழிப் பிரவாகமும் இருந்தன. வரலாறும் நிகழ்காலமும் கதைச் சரட்டினால் இணைக்கப்பட்டு படைப்பூக்கத்துடன் விவாதிக்கப்பட்டன. நாவல்கள் கடலில் கரைந்தழியும் ஆற்று நீராக இல்லாது வரலாற்றுள் மிதக்கும் எண்ணைக் கழிவுகளாக இருக்கும்படி புனையப்பட்டன. அதனால் நவீனத்துவத்தைப் பீடித்திருந்த ‘அன்றாடத்தின்’ சோம்பல் நிகழ்வுகளை வரலாற்றின் விரிவுடன் நாவல்களில் கையாள வேண்டியிருந்தது. உத்தி என்றில்லாமல் நிகழ்காலத்திற்கு வரலாற்றின் ஒரு தொடர்ச்சியையும், விவாத நோக்கையும் படைப்பூக்கத்துடன் இணைக்கும் …

துண்டு நிலம்

01. தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிடதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் செல்லும் …

அகழ் இதழ் கட்டுரையும், இரு மறுப்பும்

இச்சா நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கட்டுரைக்கு, வரிக்கு வரி மறுப்பு எழுத முடியும். ஆனால் அவரை நான் பொருட்படுத்தி வாசிப்பதுமில்லை, உரையாடுவதுமில்லை. வாசித்து அவருக்குப் பதில் எழுதுவதும் வீண் வேலை. அவர் உமா வரதராஜன், சேரன் உட்படப் பலரையும் இப்படியாக அணுகியே பல நீள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அது அவரின் அறியாமை மட்டும் அல்ல இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கமும் கூட. படைப்பைக் கொண்டு படைப்பாளியை …

இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01. இச்சா அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை …