சுனில் கிருஷ்ணனின் ‘குருதி வழி’ சரித்திரம் மேல் படியும் செதில் பொருக்கு.
சமகாலப் புனைவெழுத்தாளர்கள் குறித்து கிரிசாந் இப்படிச் சொல்வதுண்டு, ‘இவர்கள் எழுதும் புனைவுகளை விட, புனைவுகளைப் பற்றிச் சொல்லும் கதைகள், விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவர்கள் புனைவுக்கு வெளியே புனைவுகளைப் பற்றிச் சொல்வதில் ஒரு பத்து சதவீதத்தையாயினும் இவர்களால் புனைவுகளுள் எழுத முடிந்தாலே இவர்களால் சராசரிக்கும் மேலான நல்ல புனைவுகளை எழுதிவிட முடியும்’ சமகால நாவல்களை வாசிக்கும் தோறும் கிரிசாந்தின் இந்தக் ‘கருத்து’ என்னுள் இறுகி வலுவடைந்து வருகிறது. ஒரு …
