ரூஹ் : வரலாறும் நாவலின் நிகழ்காலம் அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளும் புரட்சி பிம்பங்களும்

தமிழின் நவீனத்துவத்தை மீறி வந்த நாவல்களில் கட்டற்ற போக்கும் மொழிப் பிரவாகமும் இருந்தன. வரலாறும் நிகழ்காலமும் கதைச் சரட்டினால் இணைக்கப்பட்டு படைப்பூக்கத்துடன் விவாதிக்கப்பட்டன. நாவல்கள் கடலில் கரைந்தழியும் ஆற்று நீராக இல்லாது வரலாற்றுள் மிதக்கும் எண்ணைக் கழிவுகளாக இருக்கும்படி புனையப்பட்டன. அதனால் நவீனத்துவத்தைப் பீடித்திருந்த ‘அன்றாடத்தின்’ சோம்பல் நிகழ்வுகளை வரலாற்றின் விரிவுடன் நாவல்களில் கையாள வேண்டியிருந்தது. உத்தி என்றில்லாமல் நிகழ்காலத்திற்கு வரலாற்றின் ஒரு தொடர்ச்சியையும், விவாத நோக்கையும் படைப்பூக்கத்துடன் இணைக்கும் …

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற் செறிவோ, படைப்பு மொழி குறித்த ஓர்மையோ, சொல் முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான …

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்.

சாதனாவின்  கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன.  வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்பக் கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும்   கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன். தொகுப்பின் முன்னுரையில் சாருநிவேதிதா உலகத் தரத்திற்கான  ‘அளவுகோலை’ எழுதியதாக நினைவில் …

கர்ப்பநிலம் : குணா கவியழகனின் அறியாமையும், அலுக்கோசுத்தனமும்.

The historian will tell you what happened. The novelist will tell you what it felt like – E.L. Doctorow குணாகவியழகனின் கர்ப்பநிலம் நாவலை வாசித்து முடித்த போது அவரை நினைத்து பரிதாபங்கொள்ள மட்டுமே முடிந்தது.  இவரா நஞ்சுண்டகாடு நாவலை எழுதியவர் என்ற சந்தேகமும் வந்தது. இவரின் புனைவுவெழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்ததில் அவற்றிலுள்ள அறியாமையின் மேல் ஒவ்வாமை தான் வருகின்றது. குணா கவியழகனிடமுள்ள சிக்கலென்னவென்றால், …

கொமோரா : Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோர நாவலில் அர்த்தம் நிரம்பியதாக கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் …

நிறமழியும் வலிமையற்ற உடல்கள்

ராகவனின் மூன்று கதைகள் ராகவனின் மூன்று புதிய சிறுகதைகளின் களமும் போரின் பின்னரான யாழ்ப்பாணம். அவருடைய ஆரம்பகாலச் சோதனை முயற்சிக் கதைகளிலிருந்து புதிய கதைகளின் மொழியும், உள்ளடக்கமும் உருமாறி வந்திருக்கின்றன. ஆரம்பகால அறிக்கையிடும் கட்டிறுக்கமும், பிசிறில்லாத தன்மையுடனிருந்த மொழி வட்டார வழக்கைப் பிரதிசெய்யும் விதமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.  அவர் முன்வைக்கும் கதை மாதிரிகள் தமிழிற்குப் புதியவையல்ல. ஆனால் யுத்தச் சிதிலங்களைச் சுமந்தலையும், தன் முதுகில் கலாசாரப் பழைமைகளைப் பெரும்பாரமாகக் கட்டிச் …