துதிக்கை ஒற்றல்
கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் …
