வெள்ளிவீதி – இலக்கியக் கூடுகை

சிறிய இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஓர் அவநம்பிக்கை இருக்கிறது. அது இக் காலகட்டத்தில் பலருக்கும் எழும் சந்தேகம். சமூக வலைதளங்கள் என்ற பெரிய வெளி இருக்கும் போது இலக்கியக் கூட்டங்களை ஏன் மிகச் சிறியதாக சொற்ப நபர்களுடன் நிகழ்த்தவேண்டும்? அதனால் என்ன பயன்? ஒத்த ரசனை, ஒத்த அறிவுத்திறனான நண்பர்கள் மட்டுமே கூடி கலையுமிடமாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும்? அப்படியான சிறு கூட்டங்களால் அறிவுத்தளத்தில், பண்பாட்டு வெளியில் …

கே. டானியல்: யாழ்ப்பாண பண்பாட்டின் நுட்பமான வெளி – தர்முபிரசாத்

கே.டானியல் ஈழ இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டு வெளியை எழுதியவர்களுள் மிக முக்கியமானவர். அவரளவுக்கு நுட்பமான பண்பாட்டுக் கூறுகளுடனான சமூகச் சித்திரத்தைத் தங்கள் புனைவுகளில் மிக விரிவாகவே எழுதியெடுத்திருப்பவர்கள் ஈழத்தில் மிக அரிது. அதிலும் யாழ்ப்பாணத்தில் சொற்பம்.  கே.டானியல் அளவிற்கு யாழ் சமூகத்தை விரிவாக எழுதியிருக்கும் இன்னொருவர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ).  இவர்கள் இருவரது படைப்புகளிலும் யாழின் பண்பாட்டு அகம் ஒன்று உயிர்ப்புடன் விழித்திருக்கிறது. இருவரும் எழுதியிருப்பது நாம் …

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு …

சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை (குறுநாவல்) தர்மு பிரசாத் கருப்பு பிரதிகள் வெளியீடு : தை 2026 என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை …