கர்ப்பநிலம் : குணா கவியழகனின் அறியாமையும், அலுக்கோசுத்தனமும்.

The historian will tell you what happened. The novelist will tell you what it felt like – E.L. Doctorow குணாகவியழகனின் கர்ப்பநிலம் நாவலை வாசித்து முடித்த போது அவரை நினைத்து பரிதாபங்கொள்ள மட்டுமே முடிந்தது.  இவரா நஞ்சுண்டகாடு நாவலை எழுதியவர் என்ற சந்தேகமும் வந்தது. இவரின் புனைவுவெழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்ததில் அவற்றிலுள்ள அறியாமையின் மேல் ஒவ்வாமை தான் வருகின்றது. குணா கவியழகனிடமுள்ள சிக்கலென்னவென்றால், …

கொமோரா : Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோர நாவலில் அர்த்தம் நிரம்பியதாக கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் …

வெள்ளாளச் சாதி உளவியல்

“தடம்: ஈழத் தமிழர்கள் மத்தியில் தமிழகத் தமிழர்களிடம் உள்ளதைப் போலவே சாதி என்பது மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அது புலம்பெயர்ந்தோர் மத்தியிலும்கூட உயிர்த்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.முத்துலிங்கம்: உங்களுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒருபோதும் வெறியாக மாறியது இல்லை. புலம் பெயர்ந்தபோது சாதியும் புலம் பெயர்ந்தது. ஆனால் ஒரு தலைமுறை கடந்த நிலையில் சாதி வித்தியாசம் …

தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை …

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம் கபாடபுரத்தில் வெளிவந்த தமிழ்நதியின் சிறுகதை காத்திருப்பு வாசித்தேன். அதன் மொழி, சொல் முறை குறித்து கவனம் செலுத்தவில்லை எனிலும் அதன் உள்ளடக்கம் குறித்து உரையாட முடியும். நாம் எவ்வளவு தூரம் ஒடுங்கிய சிந்தனையும், புரிதலுமாக இந்த முப்பது வருட யுத்தத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறித்த உள்ளடக்கமது. இந்த முப்பதுவருடப் போர் அனுபவங்களிலிருந்து எதையும் அறிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது. இன்று போர் …

சல்வீனியா

பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில்,  பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் …